இளங்காட்டு மாரியம்மன் பஞ்சரத்னம்
பாடல்-ஒன்று
ஆனந்த பைரவி ஆதி
பல்லவி
இன்னல்களை தீர்ப்பவளே இளங்காட்டு மாரியம்மா
அன்னையுந்தன் அருளுக்கு அளவுண்டோ ஆத்தாளே
அனு பல்லவி
முன்வினைகள் தீர்ப்பவளே முக்காலம் உணர்ந்தவளே
என் வினைகள் நீகளைவாய் எக்காலமும் துணையிருப்பாய்
சரணம்
என்னுள் உறைபவளே எழிற்கோலம் கொண்டவளே
நின்னருள் வேண்டுகிறோம் நீயே கதியம்மா
உன்னடி நாடிவந்தோம் உய்விப்பாய் எங்களையே
சன்னதியே தஞ்சமம்மா தயை புரிவாய் தாயே நீ
No comments:
Post a Comment