பல்லவி
கண்ணபுரம் தன்னில் கவினுற அமர்ந்தவளே
சன்னதிக்கு வந்திடவே என்ன பேரு பெற்றோம்
அனு பல்லவி
முன்னம் செய்திட்ட வினைகளை களைபவளே
இன்னும் பிறவிகள எடுப்பினும் நீயே கதியம்மா
சரணம்
சமயபுரம் வந்தோம் சடுதியில் காத்திடுவாய்
உமையவளின் உருவே உன்னடி சரணமம்மா
சுமையனைத்தும் நின் பாதம் தனில் சமர்ப்பித்தோம்
எமையாளும் ஈஸ்வரியே எங்களை காத்திடுவாய்
No comments:
Post a Comment